fbpx

கேரளா வந்த கொரியா பெண்ணிற்கு நடந்த அவலம்..!

கொரியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கொரியாவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை . மேலும் அவருக்கு வேற மொழி எதுவும் பேச தெரியவில்லை. 

மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்ட அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்களிடம் சிலர் தன்னிடம் தவறாக நடந்ததாகவும் மேலும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறினார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து மருத்துவ கல்லூரி அதிகாரிகள் கோழிக்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அவருக்கு ஆங்கிலம் உட்பட வேறு எந்த மொழியும் தெரியாததால், மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், பலனில்லை. கோழிக்கோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

இவ்வளவு பெரிய பாம்பா.. சர சரவென ஏறும் வைரல் வீடியோ..!

Tue Dec 27 , 2022
தற்பொழுது வைரலாகி வரும் வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று தூணில் ஏறியது. அப்போது பாம்பு படுத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏறுவதை பார்க்க முடியும். இந்த பாம்பு சுமார் 20 அடி உயரம் உள்ளதையும் காணொளியில் காணலாம். தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @snake._.world இன் Instagram கணக்கில் பகிரப்பட்டது. இது ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றது. மேலும் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் இதற்கு பல்வேறு கருத்துக்களை […]

You May Like