கொரியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கொரியாவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை . மேலும் அவருக்கு வேற மொழி எதுவும் பேச தெரியவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்ட அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்களிடம் சிலர் தன்னிடம் தவறாக நடந்ததாகவும் மேலும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து மருத்துவ கல்லூரி அதிகாரிகள் கோழிக்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவருக்கு ஆங்கிலம் உட்பட வேறு எந்த மொழியும் தெரியாததால், மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், பலனில்லை. கோழிக்கோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.