தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் திட்டங்குளம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவ்வழியாகச் காரில் சென்ற விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இதனைக் கண்டதும் தனது காரை விட்டு இறங்கி காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்து முதல் உதவி சிகிச்சை அளித்து, அவருக்கு ஆறுதல் கூறி 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு எம்எல்ஏ அனுப்பி வைத்தார்.
வாகனம் மோதி இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஓடி வந்து உதவிய செயல் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.