தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள சங்கரன்கோவிலின் அருகே இருக்கும் வாசுதேவநல்லூரில் வசித்து வந்தவர்கள் ஐயப்பன் மற்றும் செல்லதுரை என்பவர்கள். இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக பெரும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் மாறி மாறி பலமாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லதுரை ஐயப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த செயலால் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் உயிரிழந்தார்.
அப்போது தனது தந்தை ஐயப்பன் உயிரிழந்ததைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது மகன் கருப்புசாமி, தந்தையின் மரணத்திற்கு பழி வாங்குவதற்காக செல்லதுரையை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐயப்பனின் மகனான கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.