fbpx

லீவ்…! 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை… அரசு அலுவலகங்கள் இயங்காது…! ஆட்சியர் அறிவிப்பு…!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான 14.03.2025-ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஒசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் (கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான 14.03.2025- தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஓசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் 22.03.2025 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881) -என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

English Summary

Local holiday on the 14th… Government offices will not function…! Collector’s announcement

Vignesh

Next Post

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்!. 346 பணயக்கைதிகள் விடுவிப்பு; 28 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை!.

Thu Mar 13 , 2025
Train hijacking in Pakistan! 346 hostages released; 28 soldiers shot dead!

You May Like