மத்திய பிரதேசம் மாநிலத்தில் கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை செய்த வழக்கில் அவரது ஐந்தாவது மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி பகுதியைச் சேர்ந்தவர் பிரேந்தர் குர்ஜார். இவர் காஞ்சன் குர்ஜார் என்ற பெண்ணை ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரேந்தர் அப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் காயங்கள் இருந்தன. மேலும் அவரது பிறப்புறுப்பு துண்டாக வெட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அவரது குடும்பத்தினரிடமும் விசாரணையில் ஈடுபட்டனர். அந்நேரத்தில் அவரது மனைவியின் மீது சந்தேகம் எழவே அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் அந்தப் பெண்.
இது தொடர்பாக அவர் போலீசாரிடம் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார். அதன்படி பிரேந்தர் குர்ஜார் போதை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் மது அருந்திவிட்டு தனது மனைவியை மிகவும் கொடுமைப்படுத்தி இருக்கிறார். இந்தக் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாத அவர் பிப்ரவரி 21ஆம் தேதி தனது கணவரை கோடாலியால் வெட்டியும் கூர்மையான ஆயுதம் கொண்டு அவரது பிறப்புறுப்பை அறுத்தும் கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது உடலை சாலையோரத்தில் துணியில் சுற்றி வீசிவிட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. பிரேந்தரின் கொடுமை தாங்காமல் தான் அவரது நாலு மனைவிகளும் அவரைப் பிரிந்து சென்றனர் என்று தெரிந்திருக்கிறது.