fbpx

உனக்கெல்லாம் பணம் தர முடியாது போயா…..! வயதான தந்தையை உதாசீனப்படுத்திய மகன் மீது பாய்ந்தது வழக்கு…..!

மதுரை மேலூர் அருகே உள்ள கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83) இவருக்கு அண்ணாதுரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் இருக்கின்றனர் தன்னுடைய பெயரில் இருந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட மகன் மற்றும் மகள்கள் தன்னை சரியாக பராமரிக்க தவறிவிட்டதாக இளமாறன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த வருடம் புகார் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மூத்த குடிமகன் பராமரிப்பு சட்டத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேலூர் ஆர்.டி.ஓவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார் அதன் பேரில் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் மகன் மாதாந்திர பராமரிப்பு தொகையாக 5000 ரூபாயையும், மகள்கள் பராமரிப்பு தொகையாக 2500 ரூபாயையும் தந்தைக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி மகள்கள் தொடர்ந்து, பராமரிப்பு தொகையை வழங்குகிறார்கள். ஆனால் மகன் மட்டும் வழங்கவில்லை என்று இளமாறன் மேலூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பெயரில் காவல்துறையினர் அண்ணாதுரை மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

Next Post

திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்..!! தாய்-மகள் கொடூர கொலை..!! தடுக்க வந்த மருமகனுக்கும் வெட்டு..!!

Fri Jun 23 , 2023
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இவரது மகள் ராசாத்தி (32), ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35). இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். லட்சுமணன் கள்ளிப்பட்டி அருகிலுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வள்ளியம்மாள், மகள் ராசாத்தி, மருமகன் […]
திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்..!! தாய்-மகள் கொடூர கொலை..!! தடுக்க வந்த மருமகனுக்கும் வெட்டு..!!

You May Like