மதுரை மாவட்டம் பகுதியில் உள்ள சிறப்பு மிக்க திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 30-ஆம் தேதி அன்று சிறப்பாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த சூழ்நிலையில் வரதராஜன் என்பவரிடம் இருந்த ரூ.2500 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரதராஜன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. திருச்சியை சேர்ந்த முத்துலட்சுமி, மஞ்சுளா தேவி, ஜெயந்தி, லட்சுமி ஆகிய 4 பெண்களும் சேர்ந்து பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த 4 பெண்களும் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.