fbpx

கோவிலில் கூட்ட நெரிசல்.. 4 பெண்கள் செய்த மோசமான காரியம்.! சிசிடிவியில் சிக்கியது.!

மதுரை மாவட்டம் பகுதியில் உள்ள சிறப்பு மிக்க திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 30-ஆம் தேதி அன்று சிறப்பாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் வரதராஜன் என்பவரிடம் இருந்த ரூ.2500 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து வரதராஜன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. திருச்சியை சேர்ந்த முத்துலட்சுமி, மஞ்சுளா தேவி, ஜெயந்தி, லட்சுமி ஆகிய 4 பெண்களும் சேர்ந்து பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த 4 பெண்களும் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த முதியவர்.. திருப்பூரில் பரபரப்பு.!

Wed Nov 2 , 2022
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இரவு தனது வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, யாரோ மர்ம நபர் ஒருவர் ஜன்னலில் உள்ள ஒருசிறிய துவாரம் வழியாக செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் . அதனை தொடர்ந்து குடும்பத்தினர் குளியல் அறை பின்னால் இருட்டில் மறைந்திருந்த அந்த நபரை பிடித்து விசாரணை […]

You May Like