fbpx

சிக்கல்…! அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கொடுக்கனும்…! வரும் 18-ல் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு…!

ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை அனைத்து மகளிருக்கும் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தான். இந்த திட்டம் எப்பொழுது தொடங்கப்படும் என்று அனைத்து எதிர்கட்சிகளாலும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது‌. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. ஆனாலும் பல தகுதி வாய்ந்த மகளிருக்கு இந்த திட்டத்தில் பணம் வரவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வரும் நிலையில், இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை அனைத்து மகளிருக்கும் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 18-ம் தேதி போராட்டத்தை தொடங்குவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் .

Vignesh

Next Post

கவனம்...! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2வது தவணை வரவில்லையா..? உடனே இதை செய்ய வேண்டும்...!

Sun Oct 15 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றால் என்ன செய்வது..? கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு 2வது தவணை ரூ.1,000 நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பங்களின் ஏற்கப்பட்ட, அனைவரது வங்கி கணக்குகளுக்கும் இந்த தொகையானது செலுத்தப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் அல்லது பணம் வரவில்லை என்றால் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். […]

You May Like