fbpx

கை, கால் முறிவு.. பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் மருத்துவமனையில் அனுமதி…!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23-ம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலே நேற்று ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவி பலாத்கார வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை காவல்துறையினர் நேற்று கைதுசெய்தனர்.

English Summary

Man arrested in sexual assault case of university student admitted to hospital

Vignesh

Next Post

கிறிஸ்துமஸ் மரம் போல தோற்றமளிக்கும் நட்சத்திரங்கள்!. நாசா வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்!

Thu Dec 26 , 2024
NASA: கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், விண்வெளி நிறுவனமான நாசா (நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) விண்வெளியில் இருந்து கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளது. பூமியில் இருந்து 2500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது NGC 2264 என அழைக்கப்படுகிறது. இது ஒரு கிறிஸ்துமஸ் மரம் போல தோற்றமளிக்கும் நட்சத்திரங்களின் குழு. இது கிறிஸ்துமஸ் டி கிளஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. NGC […]

You May Like