fbpx

#BreakingNewsநீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு…..! பொதுமக்கள் அலறல் கோவையில் பரபரப்பு…..!

கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல என்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் கவிதா என்ற பெண்ணின் மீது அவருடைய கணவர் திராவகத்தை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்கத்தில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அதோடு திராவக வீச்சு சம்பவத்தை தடுக்க முயற்சித்த வழக்கறிஞர் மீதும் திராவகம் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற சில வாரங்களுக்கு முன்னர் தான் நீதிமன்ற வளாகம் அருகே 2 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில்தான் தற்சமயம் நீதிமன்ற வளாகத்திலேயே பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

அரிவாளில் சொட்ட சொட்ட ரத்தம்! நெல்லை அருகே துணிகர கொள்ளை!காவல்துறை விசாரணை!

Thu Mar 23 , 2023
நெல்லையருகே வீட்டிற்குள் புகுந்து ரத்தத்தை காட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சகிலா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால் தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார் […]

You May Like