கேரள மாநிலத்தில் எனது 15 வயது குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தந்தை இந்தியாவிற்கு வர அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கூத்தப்பரம்பு இன்னும் பகுதியிலேயே சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார் அவரது தந்தை அதன் பின்னர் அவரது வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் வந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அந்தப் 15 வயது சிறுமி, அவரது தந்தையால் தொடர்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த அவரை இந்தியா வரவழைத்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. சொந்த தந்தை மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் கேரளாவை மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. . பெண் குழந்தைகளுக்கு வெளியில் இருக்கும் மற்ற நபர்களால் தான் ஆபத்து என்றால் வீட்டிற்குள் இருக்கும் நெருங்கிய சொந்தங்களாலும் நடத்தப்படும் இது போன்ற கொடுமைகள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன.