தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்கள் எங்கெங்கு உள்ளனர்? என்பதை கண்டறிந்து, தெற்கு ரயில்வே தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 10 ரயில் நிலையங்களில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தெற்கு ரயில்வேவை பொருத்தவரையில், ஒட்டுமொத்தமாக 725 ரயில் நிலையங்கள் அதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அந்த ரயில் நிலையங்களில், அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடக்கும் ரயில் நிலையங்களை கண்டுபிடித்து, அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த ரயில்வே காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுபோன்று குற்ற செயல்கள் தொடர்ந்து, அதிக அளவில், நடைபெற்று வரும் ரயில் நிலையங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் அந்த ரயில் நிலையங்களில் இருக்கின்ற குறைகளை கேட்டு, அதனை நிவர்த்தி செய்து வருகிறார்கள். மேலும், கொலைகள், கடத்தல், திருட்டு போன்ற சம்பவங்களில் சிலர் ஈடுபடுவதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், ரயில்வே காவல்துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பில், அதிக குற்ற செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்களின் பட்டியலில், சென்னை எழும்பூர், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், அரக்கோணம், சென்னை சென்ட்ரல், காட்பாடி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 ரயில் நிலையங்கள் இடம் பிடித்து இருக்கிறது.
இந்த ரயில் நிலையங்களில், வெளி மாநில ரயில்கள் அதிக அளவில் வந்து செல்வதன் காரணமாக, குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த ரயில் நிலையங்களில் கூடுதலான காவல்துறையினர் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இருப்பதை விடவும், கூடுதலான பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. ரயில் நிலையங்களில், தேவையில்லாத நுழைவாயில்கள் மூடப்படும் என்றும், சுற்றுச்சுவர் அமைத்து, அதிக அளவிலான மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. மாதம்தோறும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.