தாவல் திலகம் குஷ்பு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முரசொலி நாளிதழ் நடிகை குஷ்புவுக்கு பட்டப்பெயர் வைத்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆர்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது பற்றி முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பல்வேறு கட்சித்தாவலில் தொடர்கின்றார். தேவையில்லாமல் முதல்வர் பற்றி பேசி வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2020/12/kushboo-sundar.jpg)
குஷ்பு அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்திற்குள் நிறைய கட்சிகளில் தாவியதால் இந்த பெயர் பொருத்தமாக இருக்கும் என்று பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க. நடத்திய போராட்டத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது குஷ்பு பேசுகையில் ’’மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கின்றது, பால்விலை உயர்வு வயிறு எரிகின்றது என துடிக்கின்றார். ஆனால் சமையல் எரிவாயு விலையை மட்டும் ஏற்றிவிட்டு, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்வது பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை, பால் முகவர்களுக்காக விலை ஏற்றப்பட்டுள்ளதை மட்டும் சுட்டிக்காட்டுகின்றார்.’’ என பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் குறிப்பிட்ட வார்த்தையை பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறும் குஷ்பு எச்.ராஜா பேசியதற்கு மன்னிப்பு கேட்பாரா இதுபற்றி குஷ்பு வாய்திறப்பாரா? மோடி மன்னிப்பு கேட்பாரா என பத்திரிகையில் வெளிவந்துள்ளது.