fbpx

ஓடும் ரயிலில் பயணிகளை தீவைத்து கொளுத்திய மர்ம நபர்..!! கேரளாவில் பயங்கர சம்பவம்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில் வழக்கம்போல் நேற்றும் இயங்கியது. அப்போது அந்த ரயில் கோழிக்கோடு, எலத்தூர் ரயில் நிலையம் அருகே இரவு சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இரவு சுமார் 9.30 மணியளவில் D1 கோச்சில் பயணம் மர்ம நபர் ஒருவர் தனது சக பயணிகள் மீது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதனால், பயணிகள் அலறி துடித்தனர். இதில் 2 வயது குழந்தை, பெண், ஆண் என 3 பேர் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். அதோடு ரயிலினுள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினார்.

இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்து விசாரித்தனர். அதோடு ஓடும் ரயிலில் இருந்து குதித்த 3 பேரையும் தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சஹாரா (2), ரஹ்மத், சௌபிக் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதலில் 8 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களையும் மீட்ட அதிகாரிகள் கோழிக்கோடு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் ஓடும் ரயிலில் சக பயணிகளை தீ வைத்து எரித்த கொலை முயற்சி செய்த மர்ம நபரால் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பூர்வீக வீட்டை விற்க முயற்சி செய்த அண்ணனை காட்டுப்பகுதியில் ஓட ஓட விரட்டி கொலை செய்த தம்பி…..! தூத்துக்குடி அருகே பயங்கரம்….!

Mon Apr 3 , 2023
தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்ல தம்பி. இவர் இரு லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில் அவருக்கு தொழிலில் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே கடனை அடைப்பதற்காக தன்னுடைய பூர்வீக வீட்டை விற்க அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அவருடைய தம்பி முத்துராஜ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். ஆகவே இன்று அண்ணன் நல்ல தம்பி […]

You May Like