சென்னை அருகே ஏராளமான துப்பாக்கிகளும் கொத்துக் கொத்தாக தோட்டாக்களும் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. சென்னையை அடுத்த இன்னலூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட இரும்பு கம்பிகள் காணாமல் போன வழக்கில் காவல்துறை தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சென்னை பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்த போலீஸ் அதிலிருந்து விலை உயர்ந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதால் சந்தேகமடைந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையின் விசாரணை இல்லாத இரண்டு நபர்களில் ஒருவர் முட்டுக்காடு பகுதியைச் சார்ந்த மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்து வரும் பிரித்திவிராஜ் எனவும் அவருடன் இருந்த நபர் அவருடைய நண்பர் மைசூரைச் சார்ந்த கார்த்திகேயன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்கள் இரண்டு கார்களில் வந்ததாகவும் மற்றொரு வாகனம் பெரியார் நகர் காப்புக்காடு பகுதியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்று வாகனத்தை சோதனை செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களது வாகனங்களில் துப்பாக்கிகள் அரை கிலோ கஞ்சா 58 மது பாட்டில்கள் 163 தோட்டாக்கள் என ஏராளமான பொருட்கள் வாகனங்களில் இருந்து கைப்பற்றப்பட்டது. இவை தவிர எட்டு விலை உயர்ந்த கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன. இந்தப் பொருள்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த இந்த துப்பாக்கிகளுக்கும் உரிமம் இல்லை. இதனால் அவர்களின் மீது ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகள் கடத்தல் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதிக்க வைத்திருந்தது போன்ற பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக பிரித்விராஜ் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோக பிருதிவிராஜின் வீட்டு தோட்டத்தில் இருந்தும் எர்கன் உட்பட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிகமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.