fbpx

“பகீர்.. பிறந்து 12 நாட்களான பிஞ்சு..” ஆண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் தந்தை வெறி செயல்.!

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

மத்திய பிரதேசம் மாநிலத்தின் கோட்வள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த அணில்  உய்கே என்ற நபருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 12 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மனைவியை தாக்கி விட்டு குழந்தையை எடுத்துச் சென்ற அவர் பிறந்து 12 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் கழுத்தை நெறித்து கொடூரமாக படுகொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குழந்தையின் தந்தையை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் அந்தக் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையே பச்சிளங்குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

வாகன ஓட்டிகளே..!! செம குட் நியூஸ்..!! அதிரடியாக குறையும் பெட்ரோல், டீசல் விலை..!! மத்திய அரசின் பக்கா பிளான்..!!

Wed Jan 17 , 2024
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டன. இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி நேரத்தில் மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. இதன் மூலம் […]

You May Like