fbpx

மாநிலம் முழுவதும் 159 நீதிபதிகள் அதிரடி இடமாற்றம்….!

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதி ராமன் உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த பதவியில் இருந்த எம் என் செந்தில்குமார் கோவை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிபதியாக மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற அமர்வு நீதிபதி எல் எஸ் சத்தியமூர்த்தி தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகத்தின் இயக்குனராகவும், அங்கே பணிபுரிந்த நீதிபதி டி லிங்கேஸ்வரன் சென்னை பெருநகர உரிமையியல் தடா நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதேபோன்று கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி பி முருகன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்திற்கும், நீலகிரி மாவட்ட அமர்வு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி நாராயணன் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அமர்வு நீதிபதியாகவும், அங்கே பணிபுரிந்த தலைமை அமர்வு நீதிபதி ஏ அப்துல் காதர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோன்று தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 159 நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Post

மீண்டும் மீண்டும் எச்சரித்தும் அசராத ஓபிஎஸ்….! எரிச்சலில் எடப்பாடி தரப்பினர்…..!

Sun Apr 30 , 2023
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவார வேண்டும் என்று தொடர்ந்து பன்னீர்செல்வம் முயற்சித்து வந்தார். ஆனாலும் அவருடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் முதல் கொண்டு பன்னீர் செல்வத்திற்கு எதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவிலிருந்து அதிரடியாக […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like