சாதாரணமாக, கொள்ளை சம்பவம் என்பது உள்நாட்டில் நடைபெற்றாலே அதனை தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே காவல்துறையில் ஒரு தனி பிரிவு இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவிற்கு இந்த கொள்ளை சம்பவம் மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது.
அதேநேரம் பல பரிசோதனைகளை கடந்து தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விமான பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளிவர முடியும்.
ஆனால் அப்படிப்பட்ட விமான நிலையத்திலேயே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டால் என்ன நடக்கும்?
சார்ஜாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் இயக்கப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் சிலர் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்த காவல்துறை அதிகாரிகள், பயணிகள் 2 பேரிடம் இருந்து மூன்று அரை கிலோ எடையுள்ள 2.50 கோடி மதிப்பிலான கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.
விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கடலூரை சேர்ந்த மணிகண்டன் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (20) என்ற நபர்கள் என தெரிய வந்திருக்கிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர், தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.