fbpx

காதலை ஏற்க மறுத்த 48 வயது பெண்ணை கொலை செய்த 27 வயது இளைஞர்…..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர் தீபா(48). திருமணமாகாத இவர், இந்திரா நகர் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய உறவினர்கள் அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவுக்கு பீமாராவ்(27) என்ற இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். தீபாவின் உறவினர்களுக்கும் அவர் அறிமுகமாகி உள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், தீபாவிடம் ஓட்டுநர் பீமாராவ் தன்னை காதலனாக ஏற்றுக் கொள்ளுமாறு சமீப தினங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தீபா ஓட்டுநர் பீமாராவை கொஞ்சம், கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தார் அவருடைய குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கடைக்கு செல்வதற்காக தன்னை அழைத்துச் செல்வதற்கு பீமாராவை தீபா அழைத்திருக்கிறார். அப்போது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தன்னிடம் முன்பை போல ஏன் பேசவில்லை? என்று ஆத்திரத்துடன் பீமாராவ் கேட்டிருக்கிறார். இந்த சண்டையில் தீபாவை பீமாராவ் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு நள்ளிரவு சமயத்தில் சடலத்தை பாகலூர் அருகே உள்ள ஒரு வாய்க்காலில் வீசி இருக்கிறார்.

இந்த நிலையில், தீபா திடீரென்று காணாமல் போனதையடுத்து அவருடைய உறவினர்கள் காவல்துறையிடம் புகார் வழங்கினார் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு, ஓட்டுனர் பீமாராவை காவல்துறையினர் விசாரித்த போது தான் உண்மை வெளியானது. இதனை தொடர்ந்து, ஓட்டுநர் பீமாராவை அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

கடன் சுமையால் எடுத்த விபரீத முடிவு…..! தூக்கில் தொங்கிய தம்பதிகள் அழுகிய நிலையில் மீட்பு கோவையில் பரபரப்பு…..!

Fri Mar 10 , 2023
கோயமுத்தூர் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தை சேர்ந்த அய்யாசாமி( 35) என்ற நபர் ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தரகராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா (30) இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தகைய நிலையில், கடந்த 4️ மாதங்களுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டி அதில் இருவரும் வசித்து வந்தனர். ஆனால் […]

You May Like