fbpx

14 வயது சிறுமி மரம் ஒன்றில் தூக்கு போட்டு சடலமாக மீட்பு,… உத்தரகாண்டில் அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரகாண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் முபசில் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி நேற்று அந்த பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில் சிறுமி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த அர்மன் அன்சாரி என்ற நபரை கைது செய்தனர். கட்டிட தொழிலாளியான அன்சாரி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை பேசி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டேடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அர்மன் அன்சாரியை கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்த பின் சிறுமியை அன்வர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளதாக சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

கேரளாவில்  பள்ளி மாணவர்களிடையே மோதல்...சினிமா ஸ்டண்ட் காட்சிபோல மோதல்

Sun Sep 4 , 2022
கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே சினிமா ஸ்டண்ட் காட்சி போல ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் மலப்புரம் பகுதியில் அமைந்துள்ளது நிலம்பூர். இப்பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்தனர். இதனால்  பள்ளியில் படிக்கும் மூத்த மாணவர்கள் வேட்டியில் வந்துள்ளனர். இளைய மாணவர்கள் டி.ஷர்ட்டில் வந்துள்ளனர். பள்ளியில் அறிவிப்பு கொடுத்தும் வேட்டியில் வராததைக் கண்டித்து மூத்த மாணவர்கள் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு தரப்பினரிமையே கடும் […]

You May Like