fbpx

மனைவிக்கு கிட்னி கொடுக்க தயாரான கணவன்! பரிசோதனையில் இடிப்போல் தெரிந்த செய்தி!

சொந்த சகோதரியே ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சகோதரர் அந்த விஷயம் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
அந்த தம்பதிகளும் தங்களது குடும்ப வாழ்க்கையும் திருமண வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு வேறொரு கிட்னி பொருத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர். இதற்காக அந்தக் கணவர் தனது கிட்னியை தானம் செய்ய முன் வந்தார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையின் போது தான் இந்த அதிர்ச்சியான செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

மருத்துவ பரிசோதனையின் போது இவர்கள் இருவரும் சகோதர சகோதரிகள் என்ற உண்மை தெரிய வந்ததால் அந்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். அந்த இளைஞரது பெற்றோருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த உடனேயே அந்த குழந்தையை அவர்கள் தத்து கொடுத்துள்ளனர். அந்தக் குழந்தையும் தன்னை வளர்த்த பெற்றோர்கள் தான் தன்னுடைய உண்மையான பெற்றோர்கள் என்று நினைத்து வாழ்ந்து வந்திருக்கிறது. தற்போது மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு அவரது உண்மையான பெற்றோர்கள் யாரென்று விவரம் தெரிந்திருக்கிறது. மேலும் தனது கணவன் தான் தன்னுடைய சகோதரன் என்ற அதிர்ச்சியான செய்தியும் அவருக்கு தெரிந்திருக்கிறது. இந்த உண்மை வெளியான பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Baskar

Next Post

"செம சூப்பர் சுடுகாடு"! பீச், பார்க் எல்லாம் ஓரமா வச்சுட்டு வாங்க இந்த சுடுகாட்டுக்கு போகலாம்! தகனம் செய்ய ₹1 /- மட்டுமே!

Sun Mar 19 , 2023
சுடுகாடு என்றாலே மனதிற்குள் ஒருவித பயமும் தனிமையான உணர்வும் ஏற்படுவதை தான் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இங்கு ஒரு சுடுகாடு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என ஒரு மன மகிழ் பூங்காவை போல அமைந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா???? ஆம்! குஜராத்தில் அமைந்துள்ள திசா என்ற சுடுகாடு தான் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பனிரெண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் 7 […]

You May Like