fbpx

முகநூல் நண்பர்களை நம்பி ஏமாந்த இளம் பெண்… காதலனுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து…

கர்நாடக மாநிலத்தில் தாவன கெரே வித்தியா நகரை  சேர்ந்த 25 வயது இளம்பெண் முகநூலில் சில பேருடன் நண்பராக இருந்துள்ளார். என் நிலையில் தனது முகநூல் நண்பர்களான, சிவராஜ், சுரேஷ்குமார்,  ரம்யா,பவித்ரா மற்றும் அவரது காதலனுடன் அண்மையில் அந்த பெண் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.

தங்கும் விடுதியில் அந்த பெண் தன் காதலனுடன் தனிமையில் இருந்ததை முகநூல் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பிறகு அனைவரும் சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பிறகு, முகநூல் நண்பர்கள் நாலு பேரும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு 15 லட்சம் பணம் வேண்டும் என்றும், அப்படி தராவிட்டால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறி அந்த பெண் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை வாங்கிக் கொண்ட அந்த முகநூல் நண்பர்கள் திரும்பவும் பணம் கேட்டு மிரட்டியதால் அந்த பெண் வித்யா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகநூல் நண்பர்கள் ரம்யா, பவித்ரா ,சுரேஷ் குமார் சிவராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

Baskar

Next Post

யார் இந்த கலப்பின பயங்கரவாதிகள்..? காஷ்மீரில் அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுவது ஏன்..?

Wed Aug 17 , 2022
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்.. அவரது சகோதரர் காயமடைந்தார்.. சுனில் குமார் பண்டிட் தனது சகோதரர் பிதாம்பர் நாத் பண்டிட் என்ற பிந்துவுடன் சோபியான் சோட்டிகம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு கால்நடைகளுடன் சென்றபோது, ​​அவர்கள் ஏகே-47 துப்பாக்கியால் தாக்கப்பட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிறுபான்மையினர், தொழிலாளர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் திடீரென அதிகரித்துள்ளன. […]
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்..! மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை..!

You May Like