fbpx

நடத்தையில் சந்தேகம்: இரண்டாவது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த இரண்டாவது கணவன்..!

கரூர் மாவட்டத்தில் பள்ள சங்கனூர் கிராமத்தில் வசித்து வரும் தனபாலுக்கு இரண்டு மனைவிகள் ஒருவர் மேனகா இன்னொருவர் அம்பிகா இருவரும் சகோதரிகள். தனபால் மாட்டு வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தும் தொழிலாளி. அம்பிகாவின் கணவர்  கடந்த 7 வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்ததால். மேனகாவின் சம்மதத்துடன் அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் தனபால்.  

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் தனது இரண்டாவது மனைவியான அம்பிகாவை அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அடித்து கொலை செய்துள்ளார் தனபால் . பின்னர் கொலை செய்த அம்பிகாவின் உடலை வயல்வெளியில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் போட்டு புதைத்துவிட்டு, இரண்டு நாட்களாக தனபால் தலைமுறைக்காக இருந்துள்ளார். இந்நிலையில் அம்பிகாவை உறவினர்கள் தேடி வந்த நிலையில், மது போதையில் தனது கணவர் தான் அடித்துக் கொன்று புதைத்து விட்டதாக முதல் மனைவி மேனகா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னையும் தனது கணவர் தனபால் கொலை செய்ய முயற்சித்தார் என்றும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை அடுத்து தனபாலை போலீசார் தேடி வந்த நிலையில் வெள்ளியணை போலீசாரிடம் தானாக சென்று தனபால் சரணடைந்திருக்கிறார்.   போலீசார் அம்பிகாவை புதைத்த இடம் எங்கே என்று கேட்டதும் தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று மனைவியை புதைத்த இடத்தை  காட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அம்பிகாவின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தனபாலை கைது செய்தனர்.

Baskar

Next Post

மூன்று மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு, இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை..!

Sun Jul 3 , 2022
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குள்ளாகிபாளையத்தை வசித்து வருபவர் சுகுமார். இவர் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சுகுமாருக்கு, மூன்று வருடங்களுக்கு முன்பு லாவண்யா(28) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. பிரசவம் முடிந்து பெற்றோர் வீட்டில் இருந்து லாவண்யா, கடந்த 15 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, சுகமாருக்கும் லாவண்யாவுக்கும் இடையே அடிக்கடி […]

You May Like