ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், எந்த மாநிலத்திலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலமாக, தங்களுடைய சொந்த மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக வசிப்பவர்களும் தங்களுடைய பகுதியிலேயே தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ள இயலும்.
ஆனாலும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் பொருட்கள் தமிழகத்தில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்திருந்தது.
ஆகவே அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில் எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த உத்தரவில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் தடையில்லாமல் வழங்க வேண்டும் என்றும், அதனை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.