fbpx

கணவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் விரக்தி…..! மகளுடன் தற்கொலை செய்து கொண்ட மனைவி சென்னையில் பரிதாபம்…..!

ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (42).இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஹரி கிருஷ்ணனின் சகோதரர் பிரசாத் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார். சொந்த ஊருக்கு சென்றிருந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி வெங்கடசுமலதா(34), அவருடைய மகன் கன்னியா(12) உள்ளிட்டோர் நேற்று காலை மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

அறையின் கதவு வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்த காரணத்தாலும், நீண்ட நேரம் தட்டியும் திறக்காததாலும் பிரசாத் மற்றும் வார்டு பாய் வெங்கடேஷ் உள்ளிட்ட இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே மகள் கன்னிகா கருத்தில் துப்பட்டா இறுக்கமாக சுற்றப்பட்டு இருந்தது. வெங்கட சுமலதா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வார்டு பாய் வெங்கடேசனும், பிரசாத்தும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சமூக இடத்திற்கு வந்த கேகே நகர் காவல் துறையினர் இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், ஹரி கிருஷ்ணனின் உடல்நிலை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால் விரக்தி அடைந்து, மகளை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, வெங்கடசுமலதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்திருக்கிறது.

Next Post

தாம்பரம் அருகே…..! கிறிஸ்துவ தேவாலய சொத்துக்களை விற்று 11 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் அதிரடி கைது…..!

Mon May 15 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் திம்மா வரத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை இடமாக பேராயம் செயல்பட்டு வருகிறது. இந்த பேராயத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. இந்த சொத்துக்களை கடந்த 2009ம் வருடம் முதல் 2014ஆம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியை சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் நிர்வகிக்கவும் பராமரிப்பதற்கு நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறான முறையில் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like