மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருக்கின்ற வஹாட் என்ற மாவட்டத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் கதாநாயகங்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்படுகிறது. என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
அப்போது ஒரு மாடல் அழகி மற்றும் 2 கதாநாயகிகள் என்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் சொகுசு விடுதியில் சிலரின் நடமாட்டம் சந்தேகத்தை உண்டாக்கியது. சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் அடைந்த காவல்துறையினர், தங்களுடைய கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
மாடல் அழகிகள், கதாநாயகிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் பணம் வாங்கிக்கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை உறுதி செய்வதற்காக ஒருவரை காவல் துறையினர் அந்த விடுதிக்கு அனுப்பி வைத்தனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 போஜ்புரி கதாநாயகிகளை மீட்டு உள்ளனர்.
மேலும் விபச்சாரத்தை நடத்தி வந்த முகவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அந்த 5 நட்சத்திர விடுதியில் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக கதாநாயகிகள் மற்றும் மாடல் அழகிகளை கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
போஜ்புரி கதாநாயகிகள் மற்றும் மாடல் அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி ஏமாற்றி வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது எனவும், ஒரு இரவுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்று வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விடுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது 2 பெண்கள் பிடிபட்டனர். ஆனால் கதாநாயகியின் பெயரை வெளியிட காவல்துறையின் தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டது.