fbpx

மிஸ்டு காலால் ஏற்பட்ட பழக்கம்! காதலிக்க மறுத்த மாணவியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்!

முன்பெல்லாம் ஆண், பெண் உள்ளிட்டோரிடம் நெருக்கம் ஏற்படுவது அவ்வளவு எளிதாக விஷயம் கிடையாது. ஆனால் அந்த காலகட்டத்தில் மக்களிடையே கல்வி அறிவு குறைவாக இருந்தது. அதோடு வெளிஉலக அறிவும் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் தற்சமயம் அப்படி கிடையாது எல்லோரும் படிப்பாளிகள் எல்லோருக்கும் அனைத்து விவரமும் தெரியும். ஒருவரிடம் எப்படி பழகுவது ,ஒருவர் நம்மிடம் எப்படி பழகுகிறார், எந்த விதத்தில் பழகுகிறார் என்பதை அறிந்து கொள்வதற்கான ஆற்றல் அனைவரிடத்திலும் இருக்கிறது.

ஆனால் இளம் சமுதாயத்திடம் கல்வி அறிவின் மூலமாக வெளி உலக அறிவும் வளர்ந்து விட்டது என்று சொன்னாலும், அதன் மூலமாக இளம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அதனால் பல துன்பங்களை சந்தித்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில், சென்னை ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி நர்சிங் கல்லூரியில் படித்து வருகின்றார். சென்ற சில மாதங்களுக்கு முன்னர் கைபேசியில் அவருடைய தோழியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது தவறாக வேறு ஒருவருக்கு அந்த அழைப்பு சென்று விட்டது.

இந்த நிலையில், சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் கேண்டினில் வேலை பார்த்து வரும் பண்ருட்டியைச் சார்ந்த ஐயப்பன்(23) என்பவருக்கு அழைப்பு சென்றது. தவறுதலாக போன் செய்ததை அறிந்து கொண்ட அந்த மாணவி இணைப்பை உடனே துண்டித்திருக்கிறார்.

ஆனால் தன்னுடைய கைபேசியில் மிஸ்டு கால் இருந்ததை கவனித்த ஐயப்பன் அந்த எண்ணில் மறுபடியும் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த மனைவி தவறுதலாக போன் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். மிஸ்டு கால் மூலமாக இருவருக்கும் இடையே பழக்கம் உண்டாகியுள்ளது. இருவரும் வாட்ஸ் அப்பில் பேசுவதும், செல்போனில் பேசுவதுமாக இருவரும் தங்களுடைய பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

Whatsapp மற்றும் பேஸ்புக்கில் இருவரும் அவ்வப்போது சாட்டிங்கில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், ஐயப்பன் திடீரென்று அந்த நர்சிங் மாணவியை காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியான அந்த மாணவி நான் உங்களுடன் நட்பாக தான் பழகி இருந்தேன், உங்கள் மீது எனக்கு காதல் ஏற்படவில்லை என்று தெரிவித்து ஐயப்பனின் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

நர்சிங் மாணவியின் இந்த பதிலின் காரணமாக, விரக்திக்குள்ளான ஐயப்பன் நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து நர்சிங் மாணவியை கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால் மாணவி நான் நட்பாக தான் பழகினேன் என்று மீண்டும், மீண்டும் தெரிவித்து இருக்கிறார்.

அவருடைய இந்த பதிலால் ஆத்திரத்திற்குள்ளான ஐயப்பன் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மாணவியின் தலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த மாணவி வலியால் கதறி துடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஐயப்பனை மடக்கி பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மாணவியை மீட்ட காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே மாணவியின் தலையில் தையல் போடப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக அம்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

பீஸ்ட் திரைப்பட வசூலை மிஞ்ச வாரிசு கையில் எடுத்த புதிய ஆயுதம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Sat Dec 10 , 2022
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து லட்சோப லட்ச ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் இருபெரும் நட்சத்திரங்கள் விஜயும், அஜித்தும்.திரைத்துறையில் இரு துருவங்களாக இருந்து வருபவர்கள் விஜயும், அஜித்தும் அவர்களைப் போலவே அவர்களுடைய ரசிகர்களும் இரு துருவங்களாகவே செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இருவரின் திரைப்படமும் வெளியாகும் போதெல்லாம் இருவரின் ரசிகர்களிடையே ஒரு பனிப்போர் வெடிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.ஆனால் இப்படி திரைத்துறையில் இருபெரும் துருவங்களாக […]
’தீ தளபதி’ பாடலை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!! அப்படியே அடிச்சு வெச்சிருக்கீங்களே..!!

You May Like