நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்தவர் தான் ஜனனி. அந்த பெருமையுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் ஜனனி, இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு குட்டி த்ரிஷா என்றெல்லாம் தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் நிகழ்ச்சி தொடங்கி நாட்கள் செல்ல, செல்ல அவர் மீது இருந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைய தொடங்கிவிட்டது. காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் விளையாட்டில் கவனக்குறைவாக இருந்தது தான் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏடிகே தான் வெளியேறப் போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கமல் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்வதைப்போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வகையில் ஜனனி இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் வரையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த ஜனனி ஒரு நாளைக்கு 21 முதல் 26 ஆயிரம் வரையில் சம்பளம் பேசப்பட்டு பங்கேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.