சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானார் அப்படி பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து தாய் கழகத்தில் இணைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், திருச்சி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளரான மண்டல பொறுப்பாளருமான ஆர் மனோகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கட்சியில் இருந்து விலகி சற்று நேரத்திலேயே சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து தினேஷ்குமார், அப்துல் ரஹ்மான் மற்றும் சாத்தனூர் வாசு போன்றோரும் அதிமுகவில் ஐக்கியம் ஆயினர்.