fbpx

விடுமுறையில் பார்ட் டைம் ஜாப்புக்கு போன கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கொடூர மரணம்….! திருவள்ளூர் மாவட்டம் அருகே பரிதாபம்…..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (50) இவருடைய மகன் சதீஷ் (20) இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக, தன்னுடைய செலவுக்கு அவ்வப்போது நண்பருடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்று சம்பாதித்து வந்துள்ளார் சதீஷ்.

இவ்வாறான நிலையில், 23ம் தேதி மீஞ்சூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சதீஷ் சமையல் வேலை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது பெரிய பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதில் அவருடைய உடல் வென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட அவருடைய நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக அங்கே சமையல் பணியில் இருந்த மற்ற நபர்கள் சதீஷின் நண்பர்கள் உள்ளிட்டோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கினர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Next Post

கொளுந்தனுடன் உல்லாசம்..!! மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்..!! ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்..!!

Mon May 1 , 2023
திருச்சி காவல் நிலையத்திற்குள் ரத்தம் சொட்ட சொட்ட கையில் அரிவாளுடன் இளைஞர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னுடைய மனைவியைக் கொன்று விட்டதாக வாக்குமூலம் கொடுத்தப்படியே காவல் நிலையத்திற்குள் அமர்நாத் (28) என்பவர் நுழைந்தார். திருச்சி அண்ணா நகரில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். அமர்நாத்தின் தம்பி ரகுநாத்துக்கும், அமர்நாத் மனைவிக்குமிடையே […]
கொளுந்தனுடன் உல்லாசம்..!! மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்..!! ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் சரண்..!!

You May Like