fbpx

கண்ணையலால் கொலை பற்றி பேஸ்புக்கில் கருத்து: மும்பையைச் சேர்ந்த சிறுமிக்கு கொலை மிரட்டல்…!

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சிவலிங்கத்தை பற்றி தவறாக கருத்து கூறிய ஒருவருக்கு எதிர் கருத்தாக நபிகள் நாயகம் பற்றி கருத்துக்களை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர் கடந்த 28-ந் தேதி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அமராவதி நகரில் மருந்து கடைக்காரர் இதே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கன்னையா லால் படுகொலை சம்பவம் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்ட, தெற்கு மும்பையில் உள்ள கிர்காவ் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. சமீபத்தில் இவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து, பெற்றோர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

பிரபல வில்லன் நடிகர் சிறுமிகளின் முன் நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு...!

Thu Jul 7 , 2022
கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க்கின் அருகே காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக நின்றதாக குழந்தைகள் கூறியுள்ளனர். ஆனால் குழந்தைகளால்அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் குழந்திகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து […]

You May Like