fbpx

நெல்லையில் கல்லூரி கட்டணம் செலுத்த சிரமபட்டதால்; கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை..!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தில் குடியிருப்பவர் முத்துக்குமார் (53). இவர் ஒரு கூலி தொழிலாளி. முத்துக்குமாருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகள் பாப்பா (18) பொன்னாக்குடியில் உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் பி.எஸ்.சி. சேர்ந்துள்ளார். கல்லூரி கட்டணம் 12 ஆயிரம் ரூபாயயை முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தியுள்ளார்.

அவர் கூலி வேலை செய்வதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். இருந்த போதிலும் தன்னுடைய மகள் படிப்பிற்காக மிகவும் சிரமப்பட்டு அந்த பணத்தை ஏற்பாடு செய்து காலேஜில் செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக தனது தந்தை மிகவும் சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி மாணவி பாப்பா மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து வீட்டு கதவை உள்புறமாக தாளிட்டு பாப்பா அவரது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும் அவரது மனைவியும் கதவை குச்சியால் திறந்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது அவர்களது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து களக்காடு காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும் பாப்பாவின் கைப்பையை சோதனை செய்தபோது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதாகவும், அதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Baskar

Next Post

பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய நபர்..? காவல்துறையை அலறவிட்டவர் அதிரடி கைது..!

Wed Jul 27 , 2022
திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் மனித வெடிகுண்டாக மாறப்போவதாகவும் பேசிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 23ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மனித வெடிகுண்டு என்றும், திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்போவதாகவும் மேலும் தகாத வார்த்தைகளை கூறி வசைபாடியுள்ளார். இதனால் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like