fbpx

எங்கே செல்கிறது தமிழகம்? போதையில் ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது!

திருச்சி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ்(31) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நாள்தோறும் கஞ்சா மற்றும் குடிபோறையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, அண்மையில் ஒரு நாள் இரவு இவர் தன்னுடைய குழந்தையின் அருகில் படுத்திருக்கிறார். சற்று நேரம் போன பிறகு குழந்தை அழுதிருக்கிறது. மகளின் சத்தத்தை கேட்ட தாய் அருகில் வந்து பார்த்தபோது தன்னுடைய கணவர் குழந்தைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதை தெரிந்து கொண்டார்.

உடனடியாக குழந்தையை அவரிடம் இருந்து மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அங்கே குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தகாயமுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் பிறகு இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் குழந்தையின் தந்தை மற்றும் தாயிடம் விசாரணை நடத்தி, குழந்தையின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.

Next Post

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்...!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Thu Dec 8 , 2022
2022 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று 4 மாதங்கள் மேல் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக, 7301 குரூப் 4 நிலை காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ஆம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் […]

You May Like