தமிழகத்திற்கு 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார்.
ஆகவே இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தகவல் வந்ததை தொடர்ந்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
சென்னை சேத்துப்பட்டு உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வருகை புரிந்தனர். அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் அலுவலகம் திறக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு சோதனையை ஆரம்பித்தனர். அதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.
3 வாகனங்களில் வந்திருக்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத்திலும் 13 பகுதிகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையின் நடைபெறும் பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அதேபோன்று சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திமுகவின் சட்டசபை உறுப்பினர் மோகன் வீட்டிலும், அவருடைய மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். அவர்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்தவர்கள் நீலாங்கரையில் இருக்கின்ற ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், திமுகவினர் தற்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.