என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி சட்டங்கள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டாலும், அந்த சட்டத்தையும் மீறி அது போன்ற பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், மத்திய, மாநில அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? அரசாங்கம் நிறைவேற்றிய சட்டம் நடைமுறையில் இருக்கிறதா? இல்லையா? அப்படி நடைமுறையில் இருந்தாலும் அந்த சட்டத்தின் மூலமாக குற்றவாளிகளுக்கு சரியான முறையில் தண்டனை வழங்கப்படுகிறதா? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு உண்மையிலேயே இருக்கிறதா? இல்லையா? என்று பல்வேறு கேள்விகள் மக்களிடையே செய்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சேர்ந்த தொழிலாளர்களான ராஜா (23) மதிமாறன் (21) அய்யங்காளை (24) உள்ளிட்ட மூவரும் சேர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி ஐந்தரை வயது சிறுமியை கூட்டாக இணைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையை சிவகங்கை போக்சோ நீதிமன்றம் விசாரித்தது.இதில் ராஜா, மதிமாறன், ஐயங்களை உள்ளிட்டோருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பு வழங்கினார்.
அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக 7️ லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.