fbpx

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு…..! சூதாட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் படுகொலை ஓசூர் அருகே பயங்கரம்…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெலுங்கு வருட பிறப்பு பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினங்களில் ஒரு சிலர் ஆங்காங்கே பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

அந்த விதத்தில் ஓசூர் அருகே காரப்பள்ளி என்ற கிராமத்தில் பத்துக்கும் அதிகமானோர் சீட்டுக்கட்டு விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் கார பள்ளியை சேர்ந்த மோகன் (27) மற்றும் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமேஷ், மூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து பணம் வைத்து சீட்டு விளையாடி உள்ளார்கள்.

இருவரும் மோகனிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தை வெற்றி பெற்றுள்ளார்கள். இத்தகைய நிலையில் இரவு 9 மணி அளவில் உமேஷ் மூர்த்தி உள்ளிட்ட இருவரும் காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்று உள்ளனர்.

செல்லும் வழியில் காரப்பள்ளி ஏரிக்கரை அருகே மோகன் மற்றும் அவருடைய நண்பர் மஞ்சு உள்ளிட்ட இருவரும் அவர்களை வழிமறித்து, மோகன் என்னிடம் வெற்றி பெற்ற பணத்தை கொடுத்து விடு என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த உமேஷ் மற்றும் மூர்த்தி உள்ளிட்ட இருவரும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அறிவாலை எடுத்து வந்து மோகன் என்பவரை தலை பகுதியில் 4 இடங்களில் பலமாக வெட்டி உள்ளார்கள் இதனைக் கண்ட மஞ்சு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த மோகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது. இத்தகைய சூழலில் மோகன் மீது தாக்குதல் நடத்திய உமேஷ் மற்றும் மூர்த்தி உள்ளிட்ட இருவரும் ஓசூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பிரபல பாலிவுட் இயக்குனர் உடல்நலக்குறைவால் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..

Fri Mar 24 , 2023
பிரபல பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் இன்று அதிகாலை காலமானார்.. அவருக்கு வயது 68. பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.. அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாகவும், அவரது பொட்டாசியம் அளவு வெகுவாகக் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிகிறது.. இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் அவரின் உயிர் […]

You May Like