fbpx

குடும்பம் நடத்த வராத மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்…..! கைது கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு…..!

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2️ வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜயா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் முருகன் விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட முருகன் நேற்று மாலை விஜயாவின் தாய் வீட்டிற்கு சென்று அங்கே விஜயாவை கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காலநிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர்.

அங்கே கத்தியுடன் இருந்த முருகனை பிடிப்பதற்கு முயற்சி செய்தபோது அவர் உதவி ஆய்வாளர் சத்தியசீலனை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மற்ற காவலர்கள் முருகனை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த உதவி ஆய்வாளர் சத்தியசீலன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Post

’தப்பித் தவறி கூட இந்த இடங்களுக்கு சுற்றுலா போய்டாதீங்க’..!! எங்கெங்கு தெரியுமா..?

Thu May 4 , 2023
சுற்றுலாத் தலங்கள் என்பது பல்வேறு வகைப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் குளுகுளு வென்று இருக்கும். ஒரு சில இடங்கள் வெதுவெதுப்பாக இருக்கும். தார் பாலைவனம் போன்ற இடங்கள் வறண்டு காணப்படும். இப்படி பலதரப்பட்ட இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அந்த வரிசையில், இந்த கோடை காலத்தில் இந்தியாவில் ஒரு சில இடங்களுக்கு தப்பித்தவறி கூட போய்விடக்கூடாது. அடிக்கும் வெயிலில் இந்த இடங்களுக்கு போனால் நொந்து போய் தான் வருவோம். இந்த கோடை […]
’பிகினி உடையில் சன் பாத்’..!! கோவா சென்றால் இதை மட்டும் செய்யாதீங்க..!! வெளியான புதிய அறிவிப்புகள்..!!

You May Like