fbpx

கன்னியாகுமரி பாதிரியார் வழக்கில் விசாரணை முறையாக நடைபெறுகிறது தவறான தகவலை பரப்ப வேண்டாம்…..! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்…!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெணடிக்ட் ஆண்ட்ரோ(29) என்பவர் அழகிய மண்டபம் அருகே பினாங்காலையில் இருக்கின்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார் இவர் 75க்கும் அதிகமான பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையில் பெண்கள் புகார் வழங்கியதன் அடிப்படையில், பாதிரியார் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே பாதிரியாரின் ஆபாச புகைப்படங்களை பரப்பியதாக தெரிவித்து சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் அதோடு பாதிரியாரின் கைபேசியுடன் அவருடைய நண்பர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு தனிப்பட அமைக்கப்பட்டு கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை நடைந்து வருகிறது.

சாட்சிகளையும் ஆதாரங்களையும் கைப்பற்றி குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வதற்காக நடவடிக்கையை சைபர் கிரைம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகிறார்கள் பாதிரியாரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய எல்லோரையும் கைது செய்து விசாரிக்க காவல்துறையினரின் தரப்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க பாதிரியாரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்கான முயற்சியை காவல்துறையினர் கையாள்வதாகவும், பாதிரியார் தலைமுறைவாக இருந்தபோது அவருக்கு உதவி புரிந்த முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தெரிவிக்கும்போது பாதிரியார் சம்பவத்தில் விசாரணை சரியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சமயத்தில் வழக்கறி திசை திருப்பும் விதத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

Next Post

ராமநாதபுரம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை….! 2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

Fri Mar 24 , 2023
ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவில் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் செல்வராஜ் (24) அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் நம்புகாலீஸ்வரன்(24) இவர்கள் இருவரும் நண்பர்கள் கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், சென்ற 31/7/2021 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனை அந்தப் பகுதியில் இருக்கின்ற காட்டு கருவேல மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது. […]

You May Like