நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலின் போது வெளியான வாரிசு திரைப்படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்த கையுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் நடிக்க தயாராகி விட்டார்.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு புதுமைக்கரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது இந்த திரைப்படத்தில் 14 வருடங்களுக்கு பின்னர் நடிகை திரிஷா விஜயுடன் இணைந்து நடிக்க இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பிக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கு படக்குழு செல்லும்போது எடுத்த வீடியோ யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வெளியானது.
ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற ஒரு சில தினங்களில் திரிஷா சென்னை திரும்பி விட்டார். ஆகவே அவர் திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார் என்று பல்வேறு செய்திகள் பரவத் தொடங்கினர். தற்சமயம் இது தொடர்பாக நடிகை திரிஷாவின் தாயார் உஷா தெரிவிக்கும்போது, தற்சமயம் சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி மட்டுமே.அதில் உண்மை இல்லை மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.