நம்முடைய முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள் அதாவது 5 வயது வரையில்தான் அண்ணன், தம்பி 10 வயதானால் பங்காளி என்று சொல்வார்கள் அதற்கு உதாரணம் என்னவென்றால் 5️ வயது வரையில் அண்ணன், தம்பியாகவும் 10 வயது ஆனவுடன் குடும்பத்தில் இருக்கும் சொத்துக்களுக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்று பேசும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள்.
அப்படி சொத்துக்களை பங்கிட்டு கொள்வதால் தான் பங்காளி என்று சொல்வார்கள்.அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தப் பள்ளியில் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள் அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக நடராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற அவருடைய மூத்த சகோதரர் ஒருவர் இருக்கிறார்.
இந்த நிலையில், நடராஜனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல நேற்று நடராஜன் பணிக்காக பள்ளிக்குச் சென்றுள்ளார்.அதே நேரம் அவருடைய சகோதரரான ஸ்டாலினும் கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தன்னுடைய தம்பி நடராஜனை சந்திப்பதற்காக போயிருக்கிறார். அங்கே அவர் நடராஜனை அழைத்து சொத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
அப்போது சகோதரர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், திடீரென்று ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த அறிவாளி எடுத்து சகோதரர் நடராஜனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
பள்ளியின் வளாகத்தில் ஆசிரியர் நடராஜன் ஒருவரால் வெட்டப்படுவதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான அருகில் இருந்த மாணவர்கள் ஓடி சென்று தடுத்து இருக்கிறார்கள். அதில் 11ஆம் வகுப்பு மாணவர்களான மனோஜ், ஆகாஷ், முருகன் உள்ளிட்ட 3 பேருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் ஸ்டாலினை பிடித்து வைத்துக் கொண்டு, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த ஆசிரியர் நடராஜன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் காவல்துறையினர் விரைந்து வந்து ஆசிரியர் நடராஜனை வெட்டிய அவருடைய சகோதரரான ஸ்டாலினை கைது செய்து அழைத்துச் சென்றனர்.மேலும் ஸ்டாலினிடம் தற்சமயம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி வாளாகத்தில் ஆசிரியர் ஒருவரை அவருடைய சகோதரர் சொத்து தகராறு காரணமாக, கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை மக்கள் உள்ளிட்டோரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.