சிவகாசி அருகே உள்ள கிளியம்பட்டியை சேர்ந்தவர் பிலாவாடியான் இவருடைய மனைவி அந்தோணியம்மாள். இவர்களின் மகள் தங்கம்மாள் (25) வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக புதிதாக ஸ்கூட்டி ஒன்றை வாங்கினார். தங்கமாரின் சித்தி மகனான ராஜபாளையத்தை சேர்ந்த மோட்ச ராஜா(23) என்பவர் ஒரு ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது தங்கம்மாளை காதலிப்பதாக மோட்ச ராஜா தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு தங்கம்மாள் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2013 ஆம் வருடம் மே மாதம் 19ஆம் தேதி தங்கம்மாள், மோட்சராஜா, அந்தோணியம்மாள் உள்ளிட்ட 3 பேரும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்லமநாயக்கன் பட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வைத்து அந்தோணியம்மாள் கண் முன்னே துப்பட்டாவால் தங்கம்மாளின் கழுத்தை நெரித்து மோட்சராஜா கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் ஆலங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோட்ச ராஜாவை கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் மோட்ச ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.