தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக அரசின் 2 வருட கால சாதனைகளை விளக்கம் விதமான கண்காட்சியை சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இத்தகைய நிலையில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசு 3ம் வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு தன்னுடைய வலைதள பக்கத்தின் மூலமாக தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 3வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், அவர் த அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பை என்னுடைய வாழ்வில் கிடைத்த மதிப்பான வெகுமதியாக கருதுகிறேன். மனநிறைவை வழங்கும் அனுபவமாகவும் நினைக்கின்றேன்.
இந்த ஆட்சி அடைந்திருக்கின்ற வெற்றிகளை எடுத்துரைத்தாலும் இத்தருணத்தில் என்னுடைய தலைவருக்கு நன்றி தெரிவிக்கவே நான் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் உன்னதமான சமத்துவ சமூகத்தை படைக்க வேண்டும் என்ற கழகத்தின் லட்சியத்தை முதல்வரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே செயல் வடிவம் பெற வைக்க முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.