fbpx

தாயாரின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்……! தேற்ற முயற்சி செய்த குடும்பத்தினர்……..!

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (96) வயது மூப்பின் காரணமாக ,உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்ற வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரிய குளத்தில் இருக்கின்ற பன்னீர்செல்வத்தின் இழப்பிற்கு பழனியம்மாள் கொண்டுவரப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவருடைய இல்லத்தில் நேற்று இரவு திடீரென்று காலமானார். இது தொடர்பான விவரம் அறிந்த பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து உடனடியாக தேனிக்கு விரைந்தார். தன்னுடைய தாயாரின் உடலை பார்த்தவுடன் அவரது காளை பிடித்து முகம் புதைத்து கதறி அழுதார். பன்னீர்செல்வம் அருகில் இருந்த அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவரை தேற்ற முயற்சி செய்தார்கள்.

பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

’இப்படி ஒரு திருமண அழைப்பிதழா’..? இவர்கள் யாரும் திருமணத்திற்கு வராதீங்க..!! செம ஐடியாவை யோசித்த பெண்ணின் தந்தை..!!

Sat Feb 25 , 2023
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். அதில், நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த செய்திகள் வியப்பை தருபவையாகவும், சில சமயங்களில் சோகத்தை தருபவையாகவும், சில நேரத்தில் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதன் பிறகு பல செய்திகள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் கூட இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு பத்திரிக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது திருமணங்களின் […]

You May Like