fbpx

திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர்… வாழ்க்கை முடித்துக் கொண்ட காதல் ஜோடி..!

பீதர் டவுன் பகுதியில் வசித்து வருபவர் ச சரத் (26). இவர் ஐதராபாத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சரத்தும், பீதர் டவுன் பகுதியில் வசித்து வரும் சவீதா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சவீதாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த சரத், அவரது வீட்டில் அவர்களது காதல் விவகாரத்தை கூறி, தனது குடும்பத்தினருடன் சவீதா வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது சவீதாவின் குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த சரத், வீட்டுக்கு வந்தவுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் சவீதா, தனது வீட்டின் அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பீதர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

இன்று 2 மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை எச்சரிக்கை.. 5 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிப்பு..

Wed Aug 10 , 2022
இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு […]

You May Like