fbpx

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 6️ லட்சம் ரூபாய் மோசடி….! வட மாநில நபர்களை தட்டி தூக்கிய பெரம்பலூர் காவல்துறை….!

ரஞ்சித்குமார் என்ற இளைஞர் கடந்த டிசம்பர் மாதம் பெரம்பலூர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னிடம் துபாயில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து இணையதளம் மூலமாக 6 ,23,552 பேர் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

அந்தப் புகாரினை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தனி படை அமைத்து மோசடி நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் பணியில் இறங்கிய தனிப்படை காவல்துறையினர், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மோசடி செய்துவிட்டு பதுங்கி இருந்த விகாஸ்குமார் மிஸ்ரா கௌதம் குமார் உள்ளிட்ட இருவரையும் கைது செய்த போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரித்தனர். இதில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 2,10,000 ரூபாயை மீட்டதுடன் ஒரு சிபியு, 5 கைபேசிகள் 5️ சிம் கார்டுகள், 14 ஏடிஎம் கார்டுகள், 5 வங்கி காசோலை புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதோடு பெரம்பலூர் அழைத்து வந்த காவல்துறையினர் அனைத்து நடைமுறைகளையும் முடித்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இணையதளம் மூலமாக பண மோசடி செய்துவிட்டு உத்திரபிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த விகார் மாநிலத்தைச் சார்ந்த இருவரை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்த தனிப்படை காவல்துறையினருக்கு காவல்துறை அலுவலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Next Post

நைட் இருக்கு..!! விடிஞ்சு பார்த்தா இல்ல..!! பிணவறையில் நடக்கும் மர்மங்கள்..!! பீதியில் மக்கள்..!! திகில் சம்பவம்..!!

Thu Feb 2 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், கடந்த ஜனவரி 4ஆம் தேதி அமென்ட் என்ற கிராமத்தை சேர்ந்த மோதிலால் கவுண்ட் (32) என்பவர் அனுமதிக்கப்பட்டார். தான் வேலைபார்த்து வந்த இடத்தில் மயங்கி விழுந்ததால், அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோதிலால் கவுண்ட் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் உடற்கூராய்வுக்காக குளிர்ந்த பெட்டியில் வைக்கப்பட இருந்தது. ஆனால், அப்போது […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like