fbpx

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…! 61 வயது முதியவர் அதிரடி கைது….!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடைபெறும் போதெல்லாம் நாடு எங்கே செல்கிறது? நாட்டில் இருக்கும் சட்டங்கள் என்ன செய்கிறது இந்த அவலம் இப்படியேதான் தொடருமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் மக்கள் மனதில் எழத்தான் செய்கின்றனர்.

இந்திய நாட்டை பொறுத்தவரையில் ஆணைத்து இதனான குற்றங்களுக்கும் நடைமுறைகளுக்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்களை நடைமுறை படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருவதாகவே கருதப்படுகிறது.

நாட்டில் இருக்கும் சட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்திய நாட்டில் எந்த விதத்திலும் தவறு நடைபெறாது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (61) என்ற முதியவர் தன்னுடைய உறவினரின் மகளான 13 வயது சிறுமியின் வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த 13 வயது சிறுமி நடந்ததை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் .இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரினடிப்படையில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த முதியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் அந்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அந்த நீதிமன்றத்தின் நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் நாகராஜனை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Next Post

திருவள்ளுவர் தினம் கொண்டாடுவது ஏன்…?

Mon Jan 16 , 2023
தமிழர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் என்று சொன்னால் அவர்களின் மனதில் பல தமிழ் அறிஞர்கள் தோன்றலாம். அப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் தான் திருவள்ளுவர். இவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறை என்று சிறப்பு பெற்றிருக்கிறது. 1333 திருக்குறள்கள் மூலமாக மனித வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்றுக்கொடுத்து சென்றவர் தான் திருவள்ளுவர். பிரதமர் நரேந்திரமோடி உட்பட பல தலைவர்களும் தங்களுடைய உரைகளை ஆரம்பிக்கும்போது, இன்றளவும் கூட திருக்குறளை […]

You May Like