அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அங்குள்ள ஆசிரியர்களாளேயே அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. தற்பொழுது
கோவை அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்குபாலியல் தொந்தரவு செய்வதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கோவை சுகுணாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பெற்றோர் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.