fbpx

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர்; பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்…!

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அங்குள்ள ஆசிரியர்களாளேயே அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. தற்பொழுது
கோவை அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்குபாலியல் தொந்தரவு செய்வதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

கோவை சுகுணாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த பெற்றோர் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

Baskar

Next Post

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை..! உலக வங்கி அறிவிப்பு

Fri Jul 29 , 2022
இலங்கைக்கு நிதி உதவி செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள உலக வங்கி, பிரச்சனைக்கு அடிப்படையான காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார […]
இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை..! உலக வங்கி அறிவிப்பு

You May Like