கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சார்ந்த சபரீநாத் (40) என்பவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 2️ வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்தார். நல்லூர் கிராமத்தில் உள்ள தடியர் சொந்த வீட்டில் கணவனை இழந்த பெண் தன்னுடைய மகனுடன் வசித்து வந்திருக்கிறார்.
சென்னையில் பணிபுரிந்து வரும் சபரிநாத் அவ்வப்போது விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் வீட்டிற்கு மேல் பகுதியில் இருக்கின்ற போஷனில் அவர் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சபரிநாத் கடந்த 7ம் தேதியும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் அங்கு தங்கி இருந்த அவருக்கு கீழ் வீட்டில் குடி இருக்கும் சாந்தி சமையல் செய்து கொடுப்பதற்காக மேல் பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் கதவை பூட்டிவிட்டு உள்ளே சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது.
என்னவென்று தெரியாதா அக்கம்பக்கத்தினர் பதறிப் போய் வந்து பார்த்தபோது வீடு முழுவதும் புகைமண்டலமாக கட்சி தந்தது. அத்துடன் சபரிநாத் மற்றும் சாந்தி உள்ளிட்ட இருவரும் உடலில் தீ பற்றிய நிலையில், கதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் பொதுமக்களால் அவர்களை காப்பாற்ற இயலவில்லை. செய்வதறியாமல் திகைத்து நின்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையை சார்ந்தவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்த சமயத்தில் இருவரும் உடல் கருகிய நிலையில், உயிரிழந்து கிடந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி வேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி மின் கசிவின் காரணமாக, வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த தீ விபத்து காரணமாக, நல்லூர்- பாலக்காடு சாலை பகுதியில் பெரும் ந் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.