fbpx

அய்யய்யோ என் செல்போன் டவர காணோம் பதறிப் போன நிறுவனம்……! காவல்துறையினர் வழக்கு பதிவு ராமநாதபுரம் அருகே பரபரப்பு…..!

ராமநாதபுரம் அருகே லாந்தை என்ற கிராமத்தில் ஜி டி எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்று தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று இருந்தது. இந்த கோபுரம் அந்த கிராமத்தைச் சேர்ந்த கருத்தமுத்து, பெருமாயி, நித்யானந்தம்மாள், கிருஷ்ணமூர்த்தி, மங்களேஸ்வரி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டு இருந்தது.

இந்த கோபுரத்தின் செயல்பாடு கடந்த சில வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனத்தின் மேலாளரான சென்னையை சேர்ந்த தாஜ்மல்கான் வந்து பார்த்தபோது 28.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் கோபுரம் மற்றும் மின் சாதன பொருட்கள் உள்ளிட்டவை மாயமாகி போனது தெரியவந்தது.

இது தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

திருவாரூர் அருகே மருத்துவர் வீட்டில் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை…..! காவல்துறையினர் விசாரணை…..!

Mon May 15 , 2023
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பிரேம்குமார் (57) இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இவரது மனைவி விஜிலா இவரும் மருத்துவராக இருக்கிறார் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வருகிறார். இதற்காக விஜிலா தன்னுடைய மகளுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். இத்தகைய நிலையில், பிரேம்குமார் தன்னுடைய மருத்துவமனைக்கு விடுமுறை வழங்கிவிட்டு ஒரே வளாகத்தில் உள்ள தன்னுடைய வீட்டையும், […]

You May Like