fbpx

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை….! புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

ஒரு பெண் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிவித்து விட்டால் அந்த பெண்ணிடம் இருந்து விலகிச் செல்வது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்.ஆனால் ஒரு பெண் தன் மீது விருப்பமில்லை. என்று சொன்ன பிறகும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காதலிக்க வைப்பதோ அல்லது அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்வதோ உண்மையான காதலாக இருக்காது.

அந்த வகையில், புதுவை வில்லியனூர் கணுமா பேட்டை புதுநகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சென்னை நொச்சிக்குப்பம் விஜி என்கின்ற விஜய் கடத்திச் சென்று திருமணம் செய்திருக்கிறார்.இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் தாயார் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு வில்லியனூர் காவல்துறையினர் விஜயை கைது செய்தனர்.

மேலும் விஜயின் தாயாரான லதா அவர்களையும் கைது செய்த போலீஸ், அவர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் விசாரணையின் போது கடத்திச் செல்லப்பட்ட சிறுமி 2️மாதம் கர்ப்பமாக இருந்ததால் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

அதில் குற்றம் சுமத்தப்பட்ட விஜி என்கின்ற விஜய்க்கு சிறுமி ஏமாற்றி கடத்தி செல்லப்பட்ட வழக்கில் ஏமாற்றி கடத்தி செல்வது உள்ளிட்ட காரணங்களுக்காக 3️ பிரிவுகளின் கீழ் மொத்தம் 10 வருடங்களும்,போக்சோ சட்டத்தின் கீழ் 20 வருடங்களும் சிறை தண்டனை வழங்கி அதனை முழுமையான காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருடைய தாய் லதாவுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, விஜய் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வெளியேறும் முக்கிய கதாபாத்திரம்….! அவருக்கு பதிலாக இவரா…..?

Thu Jan 26 , 2023
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நெடுந்தொடர்களுமே சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அந்த தொடரில் பாக்கியலட்சுமி கணவரால் கைவிடப்பட்ட பெண்மணிகள் துவண்டு போகாமல் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை காட்டும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார். அதேநேரம், தற்சமயம் அந்த தொடரின் கதையில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி இருவரில் யாரை திருமணம் செய்து கொள்வார்? என்று […]

You May Like